தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித், நயன்தாரா நடிக்கும் விஸ்வாசம் படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். சத்யஜோதி தியாகராஜன் தயாரித்திருக்கிறார். படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளிவருகிறது. விஸ்வாசம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...
விஸ்வாசம் தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்தில் நடக்கிற கதை. மனித வாழ்க்கையின் அடிப்படை விஸ்வாசம். ஒருவர் மீது அன்பாய் இருப்பதை விட விஸ்வாசமாக இருப்பதே சிறந்தது என்கிற மெசேஜ் சொல்லும் படம்.
இதில் அஜித், தூக்குதுரை என்ற கிராமத்து முரட்டு இளைஞனாக நடித்திருக்கிறார். படத்தின் முன் பகுதியில் கொடுவிலார்பட்டி கிராமத்திலும், பின் பகுதியில் மதுரையிலும் அஜித் ஆட்டம் இருக்கிறது. முதன் முறையாக மதுரை ஸ்லாங் பேசி நடித்திருக்கிறார்.
முதன் முறையாக அஜித் பயிற்சியும், ஒத்திகையும் எடுத்துக் கொண்டு நடித்திருக்கும் படம். சந்திரன் என்பவர் அஜித்துக்கு மதுரை ஸ்லாங்கும், கிராமத்து இளைஞனின் உடல்மொழியையும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
உதவி இயக்குனர் ஆதி.நாராயணன், காலா படத்திற்கு வசனம் எழுதிய மணிகண்டன், இரும்புத்திரை படத்திற்கு வசனம் எழுதிய பாக்யராஜ், சபரி ஆகியோர் இணைந்து விஸ்வாசம் படத்திற்கு வசனம் எழுதி உள்ளனர்.
அஜித்துடன் 4வது முறையாக இணைந்துள்ளார் நயன்தாரா. அவரது கேரக்டரின் பெயர் நிரஞ்சனா. மதுரைக்கார பணக்கார பொண்ணு.
அஜித்தின் தாய் மாமனாக தம்பி ராமய்யா நடித்திருக்கிறார். கதை, மதுரைக்கு வந்ததும் விவேக் இணைந்து கொள்கிறார். இவர்கள் தவிர ரோபோ சங்கர் படம் முழுக்க காமெடியனாக மட்டுமில்லாமல், குணசித்திர கேரக்டரிலும் வருகிறார். யோகி பாபு அஜித்தையே கலாய்த்து எடுக்கிறாராம். கலைராணி, பசங்க செந்தி, ஜாங்கிரி மதுமிதா, கோவை சரளா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இமான் இசை அமைத்திருக்கிறார். விவேகா, அருண்பாரதி, தாமரை பாடல்களை எழுதியிருக்கிறார்கள். மொத்தம் 5 பாடல்கள். மாஸ் பாடல்களும், நாட்டுப்புற பாடல்களும் கலந்திருக்கும்.
மொத்தம் 5 சண்டை காட்சிகள் இருக்கிறது. அதில் ஒரு மழை சண்டைக்காட்சி பேசப்படுகிற மாதிரி அமைந்திருக்கிறதாம். அஜித் டூப் போடாமல் 4 நாட்கள் நீரில் நனைந்து கொண்டே நடித்திருக்கிறார்.