வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி சலீம் படத்தின் மூலம் நடிகராக மாறினார். சலீம் படம் தொடங்கி 'திமிரு புடிச்சவன்' படம் வரை தான் நடித்த படங்களை தன்னுடைய பேனரிலேயே தயாரித்து வந்தார். படத்தை எடுத்து முடித்த பிறகு தமிழ்நாடு தியேட்டரிகல் உரிமத்தை மொத்தமாக யாராவது ஒரு விநியோகஸ்தரிடம் விற்றுவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த பாணியில் படம் தயாரித்ததால் லாபம் பார்த்தார். இந்நிலையில் சமீபத்திய அவரது படங்கள் சரிவர போகவில்லை. இதனால் பல படங்களில் நஷ்டம் ஏற்பட்டது. விஜய் ஆண்டனி தயாரிப்பில் அண்மையில் திரைக்கு வந்த திமிரு புடிச்சவன் படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கும் நஷ்டம் ஏற்பட்டதால் அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
எனவே, இனி எந்த படத் தயாரிப்பு வேலைகளிலும், இசை அமைப்பு பணிகளிலும் ஈடுபடப் போவதில்லை என்றும் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறேன் என்றும் சமீபத்தில் உறுதிபட கூறியுள்ளார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து விஜய் ஆண்டனி நான்கு படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த நான்கு படங்களையும் வேறு வேறு தயாரிப்பாளர்கள் தயாரிக்கிறார்கள்.