பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
லைகாவின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 2.0. ரஹ்மான் இசை, ரசூல் பூக்குட்டி சவுண்ட், நீரவ்ஷாவின் 3டி ஒளிப்பதிவு என பிரம்மாண்டமாக உருவாகி உள்ள 2.0, ரூ.500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது.
இந்திய சினிமாவின் அதிக பட்ஜெட் படம் என்ற பெருமையோடு நாளை(நவ., 29) வெளியாக உள்ள இப்படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உலகம் முழுக்க 10 ஆயிரம் தியேட்டர்களில் படம் ரிலீஸாவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பாக சென்சார் போர்டு மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில், “சுற்றுச்சூழல், பறவைகள் மற்றும் மனிதர்களைப் பாதிக்கும் என செல்போன்களைப் பற்றியும், செல் டவர்களைப் பற்றியும் தவறான கருத்துக்கள் 2.0 படத்தில் இடம்பெற்றுள்ளன. எனவே 2.0 படத்தின் டீசர், டிரைலர் மற்றும் புரொமோஷன் ஆகியவற்றுக்கு அளித்த ஒப்புதலை, சென்சார் போர்டு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த புகாருக்கு முடிவு ஏற்படும் வரை படத்தின் வெளியீட்டை சஸ்பெண்ட் செய்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு ஏற்பட்ட திடீர் எதிர்ப்பு, சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம், படம் சென்சாரின் ஒப்புதலோடு வெளியாவதால் மீண்டும் மறுதணிக்கை இருக்காது என்கிறார்கள். இதனால், ரிலீஸ்க்கும் எந்த பிரச்னை வராது என்கிறார்கள்.