'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஹிந்திப்படம் பிங்க். இதில், அமிதாப்பச்சன், டாப்ஸி, கிர்த்தி குல்ஹரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனிருதா ராய் சவுத்ரி இயக்கி இருந்தார்.
இந்தப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாகவும், தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்க இருப்பதாகவும், அமிதாப்பச்சன் கேரக்டரில் அஜித் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இது தொடர்பாக போனி கபூரும், அஜித்தும் சந்தித்து பேசினார்கள்.
இந்நிலையில், தற்போது பிங்க் படத்தின் கதையை எழுதியவர்களில் ஒருவரும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான சூஜித் சர்கார் அளித்துள்ள ஒரு பேட்டியில் "பிங் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. அதில் நடிக்கும் தமிழ் நடிகருக்கு ஏற்ப கதையில சில மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். அவற்றை நான் மதிக்கிறேன். படத்தின் பணிகள் முடிந்ததும் என்னிடம் காட்டுவதாக சொல்லியிருக்கிறார்கள். பிங்கை இயக்கிய அனிருத்தாவை நம்பியதைப்போல தமிழ் டீமையும் நம்புகிறேன், மதிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.