ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மோகன்லால் நடித்த புலி முருகன் படத்த்திற்கு வசனம் எழுதிய ஆர்.பி.பாலா, அகோரி என்கிற படத்தை எடுத்து முடித்துள்ள நிலையில் இப்போது அடுத்து அனுநாகி படத்தை தயாரிக்கவுள்ளார். மைம் கோபி,ரியாஸ்கான், ரவிகாலே ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். ராட்சசன் பட வில்லன் சரவணன், முக்கிய வில்லனாக நடிக்கிறார். ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலாவுடன் ராஜ் பிலிம்ஸ் அறந்தை.கே ராஜகோபால் இணைந்து தயாரிக்கின்றனர். விசாக் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீசாஸ்தா இசை அமைக்கிறார்.
படம் பற்றி ஆர்.பி.பாலா கூறியதாவது: தீமைக்கும், நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் கதை இது அறிவியல் சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம் என்றாலும் இதில் நட்பு ,காதல் , அன்பு , காமெடி பக்தி, கிராபிக்ஸ், சண்டை காட்சிகள் என அனைவரையும் கவரும் அம்சங்கள் இருக்கும். நாயகன், நாயகி தேர்வு நடந்து வருகிறது. என்றார்.