தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மாயா, மாநகரம் படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோ, அடுத்து தயாரிக்கும் படம் மான்ஸ்டர். ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.
எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன், நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கூறியதாவது :
இப்படம் ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கான படமாக இருக்கும். எனது முந்தைய படமான 'ஒரு நாள் கூத்து' படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அதைவிட நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். அதை பார்வையாளர்களும் உணர்வார்கள். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கும் படமென்பதால் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும்.
ஆரம்பத்தில் நான் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்க்கு வேறு ஒரு கதையைத்தான் கூறினேன். ஆனால், என் வீட்டில் ஒரு நடந்த சம்பவம் இந்த கதை உருவாக காரணமாக இருந்தது. கதையை எழுதி முடித்து இதையும் கூறினேன். அவர்களுக்கு இந்தக் கதை பிடித்துப்போனது. அதுவே இப்போது படமாகி வருகிறது.
குழந்தைகளை கவரும் எளிமையான நாயகன் தேவைப்பட்டார். அது எஸ்.ஜே.சூர்யா தான் என்று முடிவாகியது. அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் ஈர்த்துள்ளார்.
நாயகி ப்ரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்துக் கொண்டு தன்னால் இயன்ற அளவில் அதிகப்படியாக முயற்சி செய்திருக்கிறார். கருணாகரன் 'ஒரு நாள் கூத்து' படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் நிச்சயம் அனைவராலும் ரசிக்கப்படும். என்றார்.