வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தயாரிப்பாளர் சங்கத்தில், புதிய திரைப்படங்களை வெளியிடுவதற்கு திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் ஒதுக்கித் தரும் தேதிகளில் தான் உறுப்பினர்கள் படங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆனால், அந்தக் குழுவின் அனுமதி இல்லாமலேயே சிலர் படங்களை வெளியிட்டு வந்தனர். விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்த 'திமிரு புடிச்சவன்' படம் அந்தக் குழுவின் அனுமதி பெறாமல் வெளிவந்தது. அந்தப்படம் அன்றைய தேதியில் வெளிவந்ததை எதிர்த்து, அதேதினத்தில் தனது 'உத்தரவு மகாராஜா' படத்தை வெளியிட்ட தயாரிப்பாளரும், நடிகருமான உதயா தயாரிப்பாளர் சங்க செயற் குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
நேற்று தயாரிப்பாளர் சங்கத்தில் சிறப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குப்படுத்தும் குழுவின் அனுமதி பெறாமல் படங்களை வெளியிடும் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டதாம்.
அதனடிப்படையில் கடந்த வாரம் அனுமதி பெறாமல் படத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி மீது 'ரெட்' தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.