தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எம்.ஆர்.பாரதி இயக்கும் படம் அழியாத கோலங்கள் 2. பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரிராவ், நாசர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:
பாலுமகேந்திராவின் நினைவை போற்றும் வகையில் தான் இந்தப் படத்திற்கு அழிகாத கோலங்கள் 2 என்று பெயர் வைத்திருக்கிறோம். மற்றபடி அவர் இயக்கிய அழியாத கோலங்கள் படத்தின் கதைக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இது ஒரு வங்காள படத்தின் முறையான ரீமேக்.
சாகித்ய அகடாமி பெற்ற ஒரு எழுத்தாளினின் கதை. விருதை பெற்ற கையோடு தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் பழைய காதலியை சந்திக்க செல்கிறார் எழுத்தாளர். அந்த ஒரு இரவில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. வங்கமொழியில் பல விருதுகளை பெற்ற படம்.
இதில் எழுத்தாளராக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அவரது மனைவியாக ரேவதியும், காதலியாக அர்ச்சனாவும் நடித்திருக்கிறார்கள். நாசர் போலீஸ் அதிகாரியாகவும், ஈஸ்வரிராவ் செய்தி வாசிப்பாளராகவும் நடித்திருக்கிறார்கள். அடுத்த மாதம் படம் வெளிவருகிறது. என்றார்.