தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொதுவாக நடிகைகள் தங்கள் பிறந்த நாளை நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் ஆதரவற்றோர் விடுதி, மாற்றுத் திறனாளிகளின் பள்ளிகளுக்கு சென்று அவர்களுக்கு விருந்து கொடுத்து கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் கோவிலுக்குச் செல்வார்கள்.
ஆனால் நடிகை தன்ஷிகா நேற்று தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடினார். தனக்கு சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்த பாண்டியன் மாஸ்டரின் பயிற்சி கூடத்திற்கு சென்று அங்கு தனது பிறந்த நாளை கொண்டாடினார். குருவுக்கு தட்சணை கொடுத்து அவரை வணங்கினார். அதன் பிறகு அங்கு பயிற்சி பெறும் வீரர்கள், நண்பர்களுக்கு விருந்து கொடுத்தார்.
பிறந்த நாளில் ஹைலைட்டாக ஒரு சிலம்பாட்டத்தை போட்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார். இதுகுறித்து தன்ஷிகா கூறும்போது "எனக்கு தன்னம்பிக்கையும், துணிச்சலையும் கொடுத்த இடம் இது. இங்குதான் நான் தமிழ் பாரம்பரிய கலைகளை கற்றேன். இந்த இடம் எனக்கு கோவில் மாதிரி. அதனால்தான் எனது பிறந்த நாளை இங்கு கொண்டாடினேன்" என்றார்.