'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கஜா புயல் தமிழகத்தை தாக்கி சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. குறிப்பாக கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களும் கடும் சேதத்தை சந்தித்தன. இவற்றை மீட்டெடுக்க தமிழக அரசு போராடி வருகிறது.
கேரள புயலுக்கு நிதியுதவி அளித்த நடிகர்களின் பட்டியலையும், அவர்கள் அளித்த தொகையையும் குறிப்பிட்டு, அவர்கள் தமிழ்நாட்டைப் பாதித்த புயலுக்கு நிதியுதவி அளிக்காமல் அமைதி காப்பதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பலர் கிண்டல் செய்து வந்தனர்.
இந்நிலையில், நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படுவதாக சூர்யா அறிவித்துள்ளார். அவர்கள் நடத்தி வரும் அறக்கட்டளை சார்பாக சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் சார்பில் இந்த தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலுக்கு திரைநட்சத்திரங்கள் சார்பில் முதல் ஆளாக சிவகுமார் குடும்பத்தினர் நிதியுதவி அளித்துள்ளனர். இதையடுத்து மேலும் பலர் நிதியுதவி அளிப்பார்கள் என தெரிகிறது.