தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'நிபுணன்' படத்தில் நடிகர் அர்ஜுனுடன் சேர்ந்து நடித்தார் ஸ்ருதி ஹரிகரன். அவர், சமீபத்தில் மீ டூ இயக்கம் வாயிலாக, நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறினார். இதை மறுத்த அர்ஜுன், பெங்களூரு கோர்ட்டில், சுருதி மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார். அதேநேரம், அர்ஜுன் மீது போலீசில் புகார் அளித்தார் ஸ்ருதி.
இந்நிலையில், அந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க அர்ஜுன் கோர்ட் மூலம் தடை உத்தரவு வாங்கி இருக்க, விடாத ஸ்ருதி, பெங்களூருவில் உள்ள பெண்கள் கமிஷன் தலைவியை சந்தித்து, அர்ஜுன் மீது புகார் அளித்து நடிவடிக்கைக்குக் கோரி இருக்கிறார்.
இதுகுறித்து ஸ்ருதி ஹரிஹரன் கூறியதாவது: நான் அர்ஜுன் மீது சொல்லியிருக்கும் எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. அர்ஜுன் மீது புகார் அளித்து விட்டேன் என்பதற்காக, என் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அதை நான், எதிர்கொள்வேன். கோர்ட்டிலும், நான் சொன்னவைகள் அனைத்தும் உண்மை என்பதை நிரூபிப்பதோடு, ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பிப்பேன். நான் இந்தளவுக்கு உறுதியாக இருக்கிறேன் என்பதால், என்னை, அர்ஜுன் ஆதரவாளர்கள் மிரட்டுகின்றனர். அந்த பிரச்னையிலும் அர்ஜுன் சிக்கப் போகிறார். இனி, இந்த பிரச்னை அவ்வளவு எளிதாக முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.