தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யாமேனன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான 'மெர்சல்' படத்தில் மேஜிக் நிபுணராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய். அவர் பங்கேற்ற ஒரு சண்டைக்காட்சியை வெளிநாட்டில் படமாக்கியிருந்தனர்.
மேஜிக் நிபுணர் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் பங்கேற்ற சண்டைக்காட்சியில் ராமன் சர்மா என்பவர் பணிபுரிந்துள்ளார். அதில் வேலை பார்த்த தனக்கு இன்னும் தயாரிப்பு நிறுவனம் சம்பள பாக்கி வைத்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருப்பதோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
வீடியோ வெளியிட்டது மட்டுமன்றி, தேனாண்டாள் பிலிம்ஸ் படநிறுவனத்தில் அதிபரான முரளி ராமசாமிக்கும் தனக்கும் நடந்த வாட்ஸ்-அப் கலந்துரையாடலின் ஸ்கிரீன் - ஷாட்டையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதில் உள்ள தகவலின் அடிப்படையில் ராமன் சர்மாவுக்கு சம்பள பாக்கி வைக்கப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.