தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சில நாட்களுக்கு முன்பு கஜா புயல் நாகப்பட்டினம் உள்ளிட்ட தஞ்சை, நாகை மாட்டத்தில் பல பகுதிகளை நாசம் பண்ணியது. நிவாரணப் பணிகளில் அரசுடன் மக்களும், தொண்டு நிறுவனங்களும், அரசியல்கட்சிகளும் பணியாற்றி வருகிறது.
ரஜினிகாந்த் நிவாரண பணியில் ஈடுபட்டு மக்களுக்கு உதவுமாறு தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் ரஜினி ரசிகர்கள் உணவு பொட்டலங்கள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்கள். ரஜினி ரசிகர்கள் வழங்கிய உணவு பொட்டல்தில் ரஜினியின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையை வர்தா புயல் தாக்கியபோது ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டிய நிவாரண பொருட்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. இப்போது அதுபோன்ற சர்ச்சையில் ரஜினி ரசிகர்கள் சிக்கி உள்ளனர். இதனால் ரஜினி அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.