டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு சர்ச்சைகள் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் விஜய்யின் சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி உள்ள திமிரு புடிச்சவன் படமும் கதை திருட்டில் சிக்கி உள்ளது.
கிரைம் நாவல் மன்னன் என பெயரெடுத்த எழுத்தாளர் ராஜேஷ் குமார், திமிரு புடிச்சவன் பட கதை என்னுடையது என கூறியுள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது :
“கடந்தாண்டு, 'ஒன் + ஒன் = ஜீரோ' தொடர் கதையின் அடிப்படைக் கருவான, 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களை ப்ரைன் வாஷ் செய்து, தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கின்றனர் என்பது பற்றி எழுதி இருந்தேன். அந்தக் கருவை அப்படியே காப்பியடித்து 'திமிரு புடிச்சவன்' திரைப்படத்தை எடுத்துள்ளனர். இவர்கள் எப்போது திருந்துவார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ராஜேஷ் குமார்.
இந்தப் பதிவுக்குக் கீழே, அவருக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.