டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் சேதுபதி, மிஷ்கின், பகத் பாசில், சமந்தா, நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். ஆரண்யகாண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். இந்தப் படத்தில் நடித்த நதியா, பின்னர் திடீரென விலகினார், அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். நதியா ஏன் விலகினார் என்பது பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மிஷ்கினை, நதியா கன்னத்தில் அறைவது போன்ற ஒரு காட்சியை இரண்டு நாட்கள் படமாக்கினர். காட்சி யதார்த்தமாக வர வேண்டும் என்பதற்காக மிஷ்கின், "என்னை நிஜமாகவே அடியுங்கள்" என்று நதியாவிடம் கூறியிருக்கிறார். அதனால் நதியாவும் நிஜமாகவே அடித்துள்ளார். ஆனால் இயக்குனர் எதிர்பார்த்த நடிப்பு நதியாவிடமிருந்து வரவில்லை. இரண்டு நாட்கள் இந்தக் காட்சி படமாக்கப்பட்டது. நதியா 56 டேக்குகளில் 56 முறை நிஜமாகவே மிஷ்கினை அடித்துள்ளார்.
இதனால் மனம் வெறுத்துப்போன நதியா, இதற்கு மேல் என்னால் நடிக்க முடியாது வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று படத்திலிருந்து விலகி விட்டார். அதன்பிறகு நடிக்க வந்த ரம்யா கிருஷ்ணன், இரண்டே டேக்கில் இரண்டே அடி அடித்து டேக்கை ஓகே பண்ணினார். என்கிறார்கள்.
ஆனால் நிறைய அடி வாங்கிய மிஷ்கின், "இனிமேல் அவரிடம் அடிவாங்கி நடிக்க மாட்டேன். நான் விலகி கொள்கிறேன்" என்று சொன்னதாகவும், "நடிக்க வராதவங்களை ஏன் நடிக்க வைக்கிறீங்க" என்று நதியாவை வைத்துக் கொண்டே பேசியதாகவும், இதனால் அவர் கோபித்துக் கொண்டு படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.