விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டரில் சுறுசுறுப்பாக இயங்குபவர். டுவிட்டரில் அவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடருகிறார்கள். இதனால் டுவிட்டர் நிறுவனத்தின் கன்னியமான உபயோகிப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார். இந்த நிலையில் இந்தியா வந்துள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே, ஏ.ஆர்.ரஹ்மானை சந்திதித்து பேசினார்.
இந்தியாவில் டுவிட்டரின் பயன்பாடு அது எந்த அளவிற்கு பொதுமக்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு, மாணவர்களுக்கு, கலைஞர்களுக்கு பயன்படுகிறது. அதில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து இங்குள்ள பிரகமுகர்களிடம் கருத்து கேட்கவே வந்திருக்கிறார். கலைத்துறையில் அவர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளார்.
ரஹ்மானுடனான அவரது சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளது. டுவிட்டர் நிறுவனம் ஒவ்வொரு நாட்டிலும் தங்களின் ஆலோசகர்களை நியமிக்க இருப்பதாகவும், இந்தியாவில் கலைத்துறையின் சார்பில் ஆலோசகராக பணியாற்ற ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாருக்கானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜேக் டோர்சே, தன்னை சந்தித்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் "ஜேக் டோர்சேவுடனான சந்திப்பு ஊக்கம் அளிப்பதாக உள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.