இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
'36 வயதினிலே' படத்தின் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவங்கிய நடிகை ஜோதிகா, அந்தப் படத்தோடு ஓய்ந்து விடுவார் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், 'மகளிர் மட்டும்', 'நாச்சியார்', 'செங்கச் சிவந்த வானம்' என வரிசையாக நடிக்கத் துவங்கி இருக்கும் அவர், அடுத்ததாக, வித்யா பாலன் நடித்த 'தும்ஹாரி சுலு' என்ற இந்திப் படத்தின் ரீமேக்கான 'காற்றின் மொழி' படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் புரமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் ஜோதிகா கூறியதாவது:
நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால், தொடர்ந்து நடிப்பது என தீர்மானித்துள்ளேன். படத்தில் நான் நடிக்கும் கேரக்டர் வெயிட்டாக இருக்க வேண்டும். ஏற்கனவே நான் நடித்த 'குஷி' படத்தின் இரண்டாவது பாகத்தை சில எடுக்க தீர்மானித்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. அப்படி எடுக்கும்பட்சத்தில், கட்டாயம் நடிப்பேன். ஆனால், நான் ஏற்கும் அந்த கதாபாத்திரம் முதிர்ச்சியுடனும்; புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்வது போல இருக்க வேண்டும்.
இவ்வாறு ஜோதிகா கூறியுள்ளார்.