தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த 'சர்கார்' படம் உலகம் முழுவதும் நல்ல வசூலைக் கொடுத்து வருவதாகச் சொல்லி வருகிறார்கள். விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவது அட்லீ என ஏற்கெனவே தகவல் வெளியாகிவிட்டது. அந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இன்று காலை இப்படத்திற்கான எளிய பூஜை ஒன்று நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார்கள்.
இந்தப் படத்திற்குத் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாரா என்பது சந்தேகம் தான். தொடர்ந்து 'மெர்சல், சர்கார்' ஆகிய இரண்டு விஜய் படங்களுக்கும் ரகுமான் தான் இசையமைத்துள்ளார். அதனால் மாற்றத்திற்காக அனிருத் அல்லது வேறு யாராவது இசையமைப்பார்களா அல்லது ரகுமானே இசையமைக்க சம்மதிப்பாரா என்பது இன்று தெரிந்துவிடும்.
மேலும் இந்தப் படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரையும் நாயகிகளாக நடிக்க வைக்கப் பேசி வருகிறார்களாம். நயன்தாரா இதற்கு முன்பு விஜய்யுடன் 'வில்லு' படத்திலும் சமந்தா, 'கத்தி', 'தெறி' படத்திலும் நடித்திருக்கிறார். இருவரும் படத்தில் இருந்தால் தெலுங்கு வியாபாரத்திற்கும் உதவும் என தயாரிப்பு நிறுவனம் நினைக்கிறதாம்.
விஜய்யின் 63வது படமாக இந்தப் படம் உருவாக உள்ளது.