பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
படங்களை திரைக்குக் கொண்டு வருவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சில கட்டுப்பாடுகளை அறிவித்து அதை செயல்படுத்தி வருகிறது. இந்தக்கட்டுப்பாட்டை சில மாதங்களுக்கு முன் தமிழ்ப்படம் 2 படத்தின் வெளியீட்டின்போது அதன் தயாரிப்பாளர் மீறினார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததினால், தற்போது திமிரு பிடிச்சவன் படத்தின் தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி நவம்பர் 16 அன்று தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்கிறார்.
இந்நிலையில் அடுத்த மாதம் கிறிஸ்துஸ் பண்டிகையை முன்னிட்டு 4 படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறன்றன. விஜய் சேதுபதியின் 'சீதக்காதி', ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிராஷ் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள 'சர்வம் தாள மயம்' விஷ்ணு விஷாலின் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள 'பூமராங்' ஆகிய படங்கள் தான் அவை.
'சீதக்காதி', 'சர்வம் தாள மயம்' 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'பூமராங்' ஆகிய படங்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ரிலீஸ் ஒழுங்குமுறை கமிட்டியினர் ரிலீஸ் செய்ய அனுமதி அளித்துவிட்டனர்.
தனுஷின் 'மாரி-2' கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களை முன்னிட்டு டிசம்பர் 21-ஆம் தேதி வெளியாகும் என்று சில நாட்களுக்கு முன் தனுஷ் தரப்பில் டுவீட் செய்யப்பட்டுள்ளது.
'மாரி-2', படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய இதுவரையிலும் அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் கவுன்சில் கட்டுப்பாட்டை மீறி டிசம்பர் 21 அன்று படத்தை வெளியிட்டே தீருவேன் என வுண்டர்பார் நிறுவனம் அறிவித்துள்ளது.