'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த தீபாவளி அன்று வெளிவந்திருக்க வேண்டிய படம் விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன். ஆனால் அன்று வெளியான சர்கார் படம் பெரும்பாலான தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொண்டதால் படத்தை வெளியிடவில்லை. திமிரு புடிச்சவன் படத்தை 16ந் தேதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு அந்த தேதியில் வெளிவருவதாக அறிவித்திருந்த செய், உத்தரவு மகாராஜா, காற்றின்மொழி, சித்திரம் பேசுதடி 2 படங்களின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள், திமிரு புடிச்சவன் 16ந் தேதி வெளிவருதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த நிலையில் மேற்கண்ட 4 படங்கள் மட்டுமே 16ம் தேதி வெளிவரும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இந்த நிலையில் திமிரு புடிச்சவன் படத்தின் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியின் மனைவியுமான பாத்திமா விஜய் ஆண்டனி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் 'சர்கார்' திரைப்படம் திரையிடப்பட்டதால், எங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. விநியோகஸ்தர்கள் ரிலீஸ் தேதியை தவறவிட்டது அதிர்ச்சியாக இருந்தது. படத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியளித்தாலும், திரையரங்குகள் முறைப்படுத்துவதில் சிக்கல் இருக்கும் போது திரையரங்குகளை எப்படிப் பெறுவது?
இவ்வாறு பாத்திமா விஜய் ஆண்டனி தெரிவித்திருக்கிறார்.