மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'சர்கார்' படம் வெளியீட்டிற்கு முன்பாக கதை சர்ச்சையிலும், வெளியீட்டிற்குப் பின்பாக அரசியல் காட்சிகள் சர்ச்சையிலும் சிக்கியது. இந்தப்படம் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் அதிகமான தியேட்டர்களில் வெளியானது.
தெலுங்கில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு இப்படத்தின் டப்பிங் உரிமை விற்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அந்தத் தொகையை நான்கு நாட்களிலேயே பெற்று 'சர்கார்' ஆச்சரியப்படுத்தியுள்ளது. இப்படத்திற்குப் போட்டியாக வெளியான தெலுங்கு படமான 'அதுகோ', ஹிந்திப் படமான 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' ஆகிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாதது 'சர்கார்' படத்தின் வசூலுக்கு வசதியாகப் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் வசூலாகும் தொகை அனைத்தும் 'சர்கார்' படத்தின் லாபக் கணக்கில் சேரும் என்கிறார்கள் டோலிவுட்டினர். ஆந்திரா, தெலுங்கானாவைப் போலவே கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் இந்தப் படம் வெற்றிகரமான படமாக அமைந்துவிட்டது. நான்கு நாட்களில் இப்படம் 150 கோடி வசூலைக் கொடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.