இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சினிமா மட்டுமன்றி பல சமூக நல அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வரும் மலையாள நடிகை மஞ்சு வாரியர், தொடர்ந்து சமூக நல பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் கேரள அரசின் கல்வியறிவு பணியின் நல்லெண்ண தூதராகவும் பொறுப்பு வகித்து வரும் மஞ்சு வாரியரை, கேரளாவை சேர்ந்த 96 வயதான கார்த்தியாயினி அம்மா ரொம்பவே ஆச்சர்யப்பட வைத்து விட்டார்.
விஷயம் இதுதான். சமீபத்தில் .நடைபெற்ற 'அக்சரலக்சம்' என்கிற எழுத்தறிவு தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதிய இந்த மூதாட்டி 98 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதை கேள்விப்பட்டு வியந்துபோன மஞ்சு வாரியர், நேரடியாக கார்த்தியாயினி அம்மாவின் வீட்டிற்கே சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் கார்த்தியாயினி அம்மா கேரளாவில் மட்டுமல்ல, மற்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள பெண்களுக்கு ஒரு தூண்டுதலாக இருப்பார் என்றும் பாராட்டியுள்ளார்.
கார்த்தியாயினி அம்மாவின் விருப்பம் கம்ப்யூட்டரை இயக்க வேண்டும் என்பதுதான். இதை கேள்விப்பட்ட கேரளாவின் கல்வித்துறை மந்திரி தானே நேரில் சென்று அவருக்கு விலையுர்ந்த ஒரு லேப்டாப்பை பரிசாக அளித்து கௌரவப்படுத்தி உள்ளார்.