'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
தீபாவளிக்கு வெளியாக திட்டமிடப்பட்ட விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு புடிச்சவன்' படம் கடைசி நேர சிக்கலில் வெளியாகாமல் தள்ளிப் போய்விட்டது. படத்திற்கு வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான பண வரவு வராததால் தான் படம் தள்ளிப் போனது என்கிறார்கள்.
படத்தை நவம்பர் 16ம் தேதி வெளியிட தற்போது திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால், தயாரிப்பாளர் சங்க வெளியீட்டுக் குழு முடிவின்படி ஏற்கெனவே, “காற்றின் மொழி, உத்தரவு மகாராஜா, செய், சித்திரம் பேசுதடி 2, ஆர்கே நகர்” ஆகிய படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்துள்ளது.
அதே சமயம், அன்றைய தினம் வெளியிடப் போவதாக 'அடங்க மறு, சீதக்காதி' ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டன. நவம்பர் 16ம் தேதி சிறிய பட்ஜெட் படங்கள்தான் வெளியாக வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் ஏற்கெனவே அறிவித்த நிலையில், 'அடங்கமறு, சீதக்காதி' படங்களின் தயாரிப்பாளர்களை அழைத்து படத்தைத் தள்ளி வைக்கச் சொன்னார்களாம். அவர்களும் தயாரிப்பாளர் சங்க வேண்டுகோளுக்கிணங்க படங்களைத் தள்ளிவைத்துவிட்டார்கள்.
ஆனால், 'திமிரு புடிச்சவன்' படத்தை நவம்பர் 16ம் தேதி வெளியிட வேண்டும் என விஜய் ஆண்டனியின் அடுத்த பட தயாரிப்பாளர் நெருக்கடி கொடுத்து வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.