அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் பில்லா பாண்டி. இதில் இந்துஜா, சாந்தினி, விதார்த், மாரிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையவன் இசை அமைத்துள்ளார். ராஜ் சேதுபதி இயக்கி உள்ளார். கே.சி.பிரபாத் தயாரித்துள்ளார். படம் வருகிற 6ம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் மீது, ஜெ.சா.புரொடக்சன் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஜமால் சாகிப் என்பவர் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பில்லா பாண்டி படத்தை தயாரித்து வரும் கே.சி.பிரபாத், நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் தயாரிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார். அவரை நம்பி மருதாண்ட சீமை என்ற படத்தை தயாரித்தேன். 60 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் சொன்ன வாக்குறுதியை மீறி பில்லா பாண்டி படத்தை தயாரிக்கச் சென்று விட்டார். இதனால் மருதாண்டசீமை படம் அப்படியே நிற்கிறது. இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, மருதாண்ட சீமை படம் வெளிவந்த பிறகுதான் பில்லா பாண்டி வெளிவரும், மருதாண்ட சீமை படத்தை முடித்து தருகிறேன் என்று கூறினார். ஆனால் இப்போது மருதாண்ட சீமை படத்தை முடிக்காமல் பில்லா பாண்டியை வெளியிட திட்டமிட்டுள்ளார். இதனால் பில்லா பாண்டி படத்திற்கு முன் மருதாண்ட சீமை படத்தை முடித்து வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் பில்லா பாண்டி தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.