தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் கத்தி. லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப்படமும் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியது. இது எனது தாகபூமி குறும்பட கதை என அன்பு ராஜசேகர் அப்போதே குரல் தொடர்ந்து படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் இதற்காக போராடி வருகிறார்.
தற்போது சர்கார் பட விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைத்திருப்பதால் இதை மீண்டும் முன்னெடுத்துள்ளார் அன்பு ராஜசேகர். அதன்படி அவர் குடும்பத்துடன், வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளார்.
இதுதொடர்பாக அன்பு ராஜசேகர் கூறியிருப்பதாவது : எனது தாகபூமி குறும்படத்தை எனது அனுமதி இல்லாமல் முருகதாஸ் கத்தி திரைப்படமாக எடுத்ததன் தொடர்பாக, கடந்த 4 வருடங்களாக போராடி வருகிறேன். எனக்கான நியாயம் கிடைக்கும் வரை சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்ககோரி தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷாலை வலியுறுத்தியும், நான் அளித்துள்ள புகார் மனு அடிப்படையில் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்ககோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களை வலியுறுத்தியும் உண்ணாவிரதம் இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.