தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார், அதன்பிறகு இயக்கி வெளிவந்த படம் ராட்சசன். விஷ்ணு, அமலாபால், முனீஷ்காந்த், காளிவெங்கட் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். கடந்த 25 நாட்களாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் கிறிஸ்டோபர் என்ற வில்லன் வேடத்தில் சரவணன் என்பவர் நடித்திருந்தார்.
ஆனால் அவரது முகம் முற்றிலுமாக மாற்றப்பட்டிருந்தது. அதனால் அந்த வில்லன் யார் என்பது குறித்து எழுந்த கேள்விகளுக்கு விரைவில் சொல்கிறேன் என்று கூறிவந்தார் ராம்குமார். இந்நிலையில் நேற்று ராட்சசன் படத்தில் வில்லனாக நடித்த சரவணன் என்பவரை மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் அவர்.
அதையடுத்து சரவணன் பேசும்போது, நான் சினிமாவில் ஒரு இடத்த பிடிக்க பல வருடங்களாக போராடி வருகிறேன். ஓரிரு படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளேன். இப்போது நானே எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு மிகப்பெரிய வில்லன் வேடத்தை கொடுத்து என்னை ஆச்சர்யப்படுத்தி விட்டார் ராம்குமார். அதோடு முகத்தை மாற்றி நடித்த என்னை மீடியாக்களுக்கு அறிமுகம் செய்யவே ஒரு விழா எடுத்துள்ளார். இதை எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.
இந்தப்படத்தில் மேஜிக் மேனாக நடித்ததால், அதற்காக முறையாக பயிற்சி எடுத்து நடித்தேன். மேலும், என் உடம்பு முழுக்க மேக்கப் போட்டு என் தோற்றத்தையே மாற்றியிருந்ததால் மேக்கப்பை கலைக்கும் வரை ஜூஸ் மட்டுமே குடித்து நடித்தேன். சில நாட்களில் பசியால் மயக்கம் வந்து தடுமாறியிருக்கிறேன். அந்த அளவுக்கு இந்த கிறிஸ்டோபர் வேடத்திற்காக நான் கஷ்டப்பட்டிருக்கிறேன் என்றார்.