டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'சர்கார்' படத்தின் கதைத் திருட்டு விவகாரம் கடைசியில் சமசரத்திற்கு வந்து நின்று சுமூகமாக முடிந்துவிட்டது. கதையைப் பறி கொடுத்த வருண் ராஜேந்திரனுக்கு பெரிய தொகை கொடுக்கப்பட்டதாக ஒரு தகவலும், இல்லையில்லை, வருணுக்கு உதித்த அதே கதை, முருகதாஸுக்கும் உதித்தது என்ற ரீதியில் பட ஆரம்பத்தில் ஒரு விளக்கம் இடம் பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனாலும், பெரிய தயாரிப்பு நிறுவனம், பெரிய இயக்குனர், பெரிய நடிகர் ஆகியோரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வருண் ராஜேந்திரனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அவருக்குக் கிடைத்த இந்த வெற்றி ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணி இதற்கு முன்பு இணைந்த 'கத்தி' பட விவகாரத்தில் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இப்போது மீண்டும் எழுந்துள்ளது.
'கத்தி' படத்தின் கதை தன் கதை என 'அறம்' படத்தின் மூலம் இயக்குனரான கோபி நயினார் அப்போது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலவரம் என்ன என்று இன்று பலரும் கேள்விகளை எழுப்பினர். அந்த வழக்கில் சாட்சி சொன்ன கோபி நயினாரின் பத்திரிகையாளர் நண்பர் ஒருவர் 'கத்தி' வழக்கு பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்த வழக்கு தற்போதும் சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் தான் இருக்கிறதாம். சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின் வழக்கு பற்றிய விசாரணைக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. கோபி நயினாரும் அடுத்த பட வேலைகளில் பிஸியாகிவிட்டதால் இதைப் பற்றி மீண்டும் ஒரு கேள்வி எழவில்லை என்று கூறியிருக்கிறார்.
'சர்கார்' விவகாரத்தால் மறந்து போன 'கத்தி' கதை விவகாரம் இன்று மீண்டும் பலரை ஞாபகப்படுத்திவிட்டது.