இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இந்த படம், நான் எழுதி எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ள செங்கோல் கதையில் உருவாகியிருக்கிறது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் குற்றம் சாட்டியதோடு, வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்நிலையில், சர்கார் படத்தின் கதைச்சுருக்கத்தை எழுத்தாளர் சங்கத்தலைவர் டைரக்டர் கே.பாக்யராஜிடம் முருகதாஸ் கொடுத்த பிறகு அதை படித்த அவரும் செங்கோலும், சர்காரும் ஒரே கதைதான் என்று சொன்னவர், வருண் ராஜேந்திரனுக்கு ஏதேனும் தொகையை கொடுத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமாறு கூறியிருந்தார்.
ஆனால் முருகதாஸ், சர்கார் கதை என்னுடையதுதான். அதனால் யாருக்கும் பணம் கொடுத்து சரிகட்ட வேண்டிய அவசியமில்லை என்று சொன்னவர், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருப்பேன் எனறு கூறிவிட்டார்.
இந்த நேரத்தில், மகேஷ்பாபுவை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தை தயாரித்த தாகூர் மது என்பவர் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில், கடந்த 18 ஆண்டுகளாக நான் ஏ.ஆர்.முருகதாசுடன் பயணிக்கிறேன். 5 படங்களை அவரை வைத்து தயாரித்திருக்கிறேன். அவர் மிகவும் நேர்மையானவர். அவர் சொந்தமாக சிறந்த கதைகளை எழுதக்கூடிய ஆற்றல் மிக்கவர். அதனால் இன்னொருத்தரோட கதையை படமாக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை என்று முருகதாசுக்கு ஆதரவாக தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.