ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர், வடசென்னை படத்திற்கு பிறகு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக அறிமுகமாகிறார்.
இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், தெலுங்கு என் தாய்மொழி என்பதால் சில வருடங்களாகவே தெலுங்கில் நடிக்க முயற்சி எடுத்து வந்தேன். அந்த வாய்ப்பு இப்போது தான் கிடைத்துள்ளது. அதுவும் விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கில் அறிமுகமாவது மகிழ்ச்சியாக உள்ளது. என் தந்தை ராஜேஷ், தெலுங்கில் 25 படங்கள் வரை நடித்தவர்.
இந்த தெலுங்கு படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராகத்தான் நான் நடிக்கிறேன். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடி என்பதை விட, ஒரு அழுத்தமான வேடத்தில் நடிக்கிறேன். எனக்கு பர்பாமென்ஸ் பண்ண நல்ல ஸ்கோப் உள்ள வேடம் தான். அதனால் தமிழைப்போலவே தெலுங்கிலும் இமேஜ் என்ற வட்டத்திற்குள் சிக்காத ஒரு நடிகையாக இடம் பிடிப்பேன் என்கிறார்.