ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மீடு என்பது பெண்களுக்கு அவசியமான ஒரு மூவ்மெண்ட். அதை தவறாக பயன்படுத்த கூடாது.. என நடிகர் தியாகராஜன் கூறி உள்ளார்.
தமிழ் சினிமாவில், மீ டூ விவகாரம், சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கவிஞர் வைரமுத்து, நடிகர் அர்ஜுனை தொடர்ந்து, நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தியாக ராஜன் மீது, பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் பாலியல் புகார் கூறி உள்ளார்.தியாகராஜனின் மகனும், நடிகருமான பிரசாந்த் நடித்த, பொன்னர் சங்கர் படத்தில், தனக்கு ஏற்பட்ட அத்துமீறல் குறித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதை மறுத்து தியாகராஜன் கூறியிருப்பதாவது : பிரித்திகா மேனன் எனும் ஒரு பெண், நான் இயக்கி தயாரித்த கலைஞரின் பொன்னர் சங்கர் படத்தில் மூன்று, நான்கு நாட்கள் அப்ரண்டீஸ் புகைப்பட கலைஞராக வேலை செய்த போது இரவில் யாரோ அவரது அறை கதவை தட்டியதாகவும், அது நானாக இருக்கலாம் என்ற யூகத்தில் அவரது பேஸ் புக் அக்கவுண்டில் தவறான ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். இதை நான் முற்றிலும் மறுக்கிறேன்.
பிரித்திகா மேனன் தற்போது எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. என்மீது வீண் பழி சுமற்றி என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அந்த பெண் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளேன். அதோடு இது போன்ற பொய் குற்றச்சாட்டு கூறுபவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். விரைவில் ஊடகங்கள் முன்னிலையில் பல உண்மைகள் வெளிவரும்.. இவ்வாறு தியாகராஜன் தெரிவித்துள்ளார்.