டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள 'வடசென்னை' படம் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் வடசென்னை வாழ் மக்களைப் பற்றிய கதையாக உருவாகியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள பெண் கதாபாத்திரங்கள் கூட படத்தில் அசிங்கமான கெட்ட வார்த்தைகளைப் பேசுகின்றன.
குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் ஒரு கெட்ட வார்த்தை இதுவரை எந்த ஒரு சினிமாவிலும் இடம் பெறாத ஒரு அசிங்கமான கெட்ட வார்த்தை. அந்த வார்த்தையை எப்படி சென்சாரில் அனுமதித்தார்கள் என்று இப்போது கேள்வி எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் கூட அடிக்கடி கெட்ட வார்த்தைகளைப் பேசுகின்றன.
'வடசென்னை' என்றாலே இப்படிப்பட்ட மக்கள்தான் இருப்பார்கள் என்ற மோசமான முன்னுதாரணத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது என வடசென்னை வாழ் மக்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். 'வடசென்னை' படத்தின் அடுத்த இரண்டு பாகங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். அவற்றில் இது போன்ற கெட்ட வார்த்தைகள் இருக்கக் கூடாது என்று பலரும் இப்போதே கோரிக்கை வைத்துள்ளார்கள்.