'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விரும்மாண்டி, எம் மகன், சண்டக்கோழி, சிவப்பதிகாரம், பைரவா, மாரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் நடிகர் சண்முகராஜன். தற்போது முன்னணி சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் நந்தினி என்கிற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் மீது இதே சீரியலில் நடிக்கும் நடிகை ராணி, சென்னை, செங்குன்றம் போலீசில் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணி, சண்முகராஜன், தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார். என் உடலில் அங்கும், இங்கும் தொடுகிறார். தனியாக அவரது ரூமிற்கு வரும்படி கூறுகிறார். இதற்கு நான் மறுக்கவே, என்னை தாக்கினார். இதை என் கணவர் தட்டி கேட்டபோது அவரையும் அடிக்க பாய்ந்தார் என்றார்.
இதுகுறித்து செங்குன்றம் போலீசார் விசாரித்து வரும் வேளையில், நடிகர் சண்முகராஜன், செங்குன்றம் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் சண்முகராஜன், ராணியிடம் மன்னிப்பு கேட்டார். இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதனால் ராணி, புகாரை வாபஸ் பெற்றார்.