வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
உள்ளத்தை அள்ளித்தா மூலம் அறிமுகமான ரம்பா தென்னிந்திய மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் வசிக்கும் தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலானார். இந்த தம்பதிகளுக்கு லாவண்யா, சாஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்தியா திரும்பிய ரம்பா, மீண்டும் சினிமாவில் நடிக்க முயற்சித்தார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். திடீரென மனம் மாறிய ரம்பா, கணவனை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் சமாதானம் ஏற்பட்டு இணைந்தனர்.
சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் ரம்பா. சமீபத்தில் தனது வளைகாப்பு நிகழ்ச்சியை பெரியதாக நடத்தினார். தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை கணவர் இந்திரகுமார் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.