600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த எட்டு வருடங்களில் தமிழ் சினிமாவில் வெளிவந்த 'ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை' ஆகிய படங்களில் 'ஓ காதல் கண்மணி' படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது. மற்ற மூன்று படங்களுமே எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. சினிமாவில் அறிமுகமாகி 25 வருடங்களுக்கு மேலானலும் அந்தந்த காலகட்டங்களுக்கேற்ப இளைஞர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கான படங்களைக் கொடுப்பதையே வழக்கமாக வைத்திருப்பவர் மணிரத்னம். ஆனாலும், அந்தத் தோல்விகள் அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலும் சொந்தப் படங்களையே அவர் தயாரிப்பதால் அவருக்கு பிரச்சினையில்லை.
தமிழில் முதல் முறையாக புதிய கூட்டணி முன்னணி நடிகர்கள் நடித்துள்ள 'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போது அதிகமாகியுள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. சிறப்புக் காட்சிகள் அதிகாலை 5 மணிக்கே நடைபெற உள்ளன. சிம்பு, விஜய் சேதுபதி படத்தில் இருப்பதால் படத்திற்கான முன்பதிவும் எதிர்பார்ப்பைவிட நன்றாகவே உள்ளதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய பழைய வெற்றியை மணிரத்னம் மீண்டும் இந்தப் படம் மூலம் பெறுவாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.