பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கடந்த சில தினங்களுக்கு முன்பு வயதான தோற்றத்தில் ஒருவர் நடந்த வருவது போன்ற படம் வெளியானது. இது காக்கா முட்டை மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி என்ற படத்தின் பர்ஸ்ட்லுக் என்றும், விஜய்சேதுபதி வயதான விவசாயி வேடத்தில் இப்படி தோன்றுகிறார் என்றும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது பாலாஜி தரணிதரன் இயக்கும் சீதக்காதி படத்தின் தோற்றம் என்றும் செய்திகள் வெளியானது. விஜய் சேதபதிக்கு வாழ்த்துக்களும் குவிந்தது. இந்த நிலையில் அது விஜய் சேதுபதி இல்லை, நெல்லையை சேர்ந்த கவிஞர் கிருஷி என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கவிஞர் கிருஷி கூறியதாவது: திருநெல்வேலியில் நடந்த சித்த அறக்கட்டளை அமைப்பு ஒன்று நடத்திய நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அப்போது எங்கு எனது நண்பர் ஒருவர் எடுத்த புகைப்படம் அது. நான்தான் விஜய்சேதுபதி என்ற பரபரப்பால் என் மீது அன்பு கொண்ட உள்ளங்களை அறிந்து கொள்ள முடிகிறது. என்றார்.
"ஒரு விஷயத்தை பகிர்வதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை விஷயம் கூட பின்னபற்றப்படாதது வருத்தம் அளிக்கிறது" என்கிறார்கள் மணிகண்டனும், பாலாஜி தரணிதரனும்.