‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விஜய்சேதுபதி தனக்கு ஆரம்ப நாட்களில் பட வாய்ப்பு வழங்கிய பாலாஜி தரணிதரன், கோகுல், அருண்குமார் போன்ற இயக்குநர்களுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளை வழங்கி வருகிறார். அது மட்டுமல்ல, தன்னை வைத்து 'புறம்போக்கு' படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு அடுத்து பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை அறிந்து அவரை இயக்குநராக வைத்து தன்னுடைய தயாரிப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.
அதுமட்டுமல்ல, எஸ்.பி.ஜனநாதனிடம் 'பேராண்மை', 'புறம்போக்கு' ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் கிருஷ்ணா ரோகாத்துக்கும் தன்னை வைத்து படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். 'புறம்போக்கு' படத்தில் நடிக்கும்போது விஜய்சேதுபதிக்கு அறிமுகமானவர்தான் வெங்கட் கிருஷ்ணா ரோகாத்.
'உங்களுக்கு பொருத்தமான ஒரு கதை வெங்கட் கிருஷ்ணா ரோகத்திடம் 'இருக்கிறது, கேளுங்கள்' என்று விஜய்சேதுபதியிடம் சொல்லி கதை கேட்க வைத்திருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன். அதன்படி அந்த கதையை கேட்ட விஜய்சேதுபதிக்கு கதை மிகவும் பிடித்து விட உடனே வெங்கட் கிருஷ்ணா ரோகத் இயக்கத்தில் நடிக்க ஒப்புகொண்டுள்ளார்! ஆரஞ்சுமிட்டாய், சீதக்காதி போன்ற படங்களில் தனது தோற்றத்தை மாற்றி நடித்துள்ள விஜய்சேதுபதி இந்த படத்திற்காகவும் தனது தோற்றத்தை மாற்றி நடிக்க இருக்கிறாராம்.
மியூசிக்கல் சப்ஜெக்ட்டான இந்த படத்தில் வெளிநாட்டு நடிகை ஒருவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.