ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படம், அடுத்த வாரம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக இத்தனை ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.
சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் இவர்கள் நான்கு பேரும் தான் இந்தப் படத்தின் ஹீரோக்கள். படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது அரவிந்த்சாமி மூத்த அண்ணன், அவருக்கு அடுத்து அருண் விஜய், சிம்பு ஆகியோர் போலத் தெரிகிறது. விஜய் சேதுபதி அரவிந்த்சாமியின் நண்பராக, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இன்று வெளியாகியுள்ள இரண்டாவது டிரைலரில் பெரியவரு போயிட்டாருன்னா யாருக்குப் பெரிய லாபம் என சிம்பு கேட்கிறார். அரவிந்த்சாமியிடம் ஒரு பெண் சேனாபதிக்கு அடுத்த வாரிசு வரதராஜன்தானா, உன் தம்பிங்க எனக் கேட்கிறார். அடுத்த காட்சியில் அரவிந்த்சாமி, தியாகுவும், வைத்தியும், ரொம்பவே கேர்புல்லா இருக்கணும்,” என்கிறார். பின்னர் சிம்பு, டேய், அண்ணா இதை ஆரம்பிச்சி வச்சது நீ மறந்துடாத,” என்று எச்சரிக்கிறார்.
துப்பாக்கி, ரத்தம், அடிதடி என பெயருக்கு ஏற்பவே சிவந்த மாதிரி இருக்கும் இரண்டாவது டிரைலரின் காட்சிகள், இந்தப் படத்தில் யாருக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் என்ற ஆவலை இப்போதே தூண்டியுள்ளது. சேனாபதிக்குப் பின் யார் வாரிசு ?, இதுதான் செக்கச் சிவந்த வானம் ?.