ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் முன்னணி இளம் நடிகராக விளங்கும் அல்லு அர்ஜூன், கடைசியாக நடித்த நா பேரு சூர்யா படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால் தனது அடுத்த படத்தை தேர்வு செய்வது குறித்து குழப்பத்திலேயே இருந்து வந்தார். ஏற்கனவே இயக்குனர் விக்ரம் கே குமார் சொன்ன கதை அவருக்கு பிடித்துப்போய் ஓகே சொல்லியிருந்தாலும் அதில் எந்த அளவுக்கு வெற்றிக்கான சதவீதம் இருக்கும் என்கிற சந்தேகமும் அல்லு அர்ஜூனிடம் இருக்கிறதாம்.
தற்போதைக்கு ஒரு கமர்ஷியல் இயக்குனரின் படம் ஒன்றில் நடித்து ஒரு ஹிட் கொடுத்த பின்னால், விக்ரம் கே குமார் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் அல்லு அர்ஜூன். அதற்காக தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் த்ரிவிக்ரமைத்தான் அவர் டிக் அடித்து உள்ளாராம். தற்போது ஜூனியர் என்.டி.ஆர் படத்தை இயக்கி வரும் த்ரிவிக்ரம் அந்தப்படத்தை முடிக்கும் தறுவாயில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.