கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
எந்த ஒரு திரையுலகத்திலும் இதற்கு முன்பு இப்படி நடந்திருக்குமா என்பது ஆச்சரியம் தான். கணவன், மனைவியான நாகசைதன்யா, சமந்தா ஆகியோர் நடித்த மூன்று படங்கள் ஒரே நாளில் வெளியாகி போட்டி போட்டு மூன்றுமே வெற்றி பெற்றுள்ளன.
நாகசைதன்யா, அனு இமானுவல், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த 'ஷைலஜா ரெட்டி அல்லுடு', சமந்தா நடித்த 'யு டர்ன், சீமராஜா' ஆகிய படங்கள் கடந்த வாரம் வெளியாகின. இந்த மூன்று படங்களுமே எதிர்பார்ப்புகளையும் மீறி நல்ல வசூலைப் பெற்று வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமர்சன ரீதியாக சில பல நெகட்டிவ் கருத்துகள் வந்தாலும், அதையும் மீறி இந்தப் படங்கள் வசூலிப்பதால் கண்டிப்பாக நஷ்டம் வராது என்கிறார்கள்.
இதில் நாகசைதன்யா, சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் அவர்கள் நடித்து வெளிவந்த படங்களில் அதிகப்படியான வசூலை இப்போது பெற்றிருக்கிறார்கள். சமந்தா நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த 'யு டர்ன்' இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தங்கள் படங்கள் ஒரே நாளில் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளதால் சமந்தா, நாகசைதன்யா சந்தோஷத்தில் இருக்கிறார்களாம். இந்த வெற்றியைக் கொண்டாட விரைவில் வெளிநாடு பறக்க இருப்பதாகவும் தகவல்.