Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லலித் குமார் நல்லவன் இல்லை : டிவி நடிகை நிலானி கண்ணீர்

18 செப், 2018 - 20:45 IST
எழுத்தின் அளவு:
TV-actress-Nilani-reveals-dark-side-of-Gandhi-Lalit-Kumar

லலித்குமார் நல்லவன் இல்லை; பல பெண்களை ஏமாற்றியுள்ளான் என, டிவி நடிகை நிலானி புகார் தெரிவித்துள்ளார்.

துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, போலீசாரை அவதுாறாக பேசி பிரபலமானவர் டிவி நடிகை நிலானி 36. வளசரவாக்கம், அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த இவர், ஜாமீனில் வெளியே வந்து, மீண்டும் நடித்து வருகிறார். இவருடன் நெருங்கி பழகி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காந்தி லலித்குமார் 33, நிலானியை திருமணம் செய்ய இருந்தார்.

ஆரம்பத்தில் சம்மதித்த நிலானி பின் மறுத்தார். அத்துடன் லலித்குமார் மீது காவல் நிலையத்திலம் புகார் கொடுத்தார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, தீக்குளித்து தற்கொலை செய்த லலித்குமார், சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து நிலானி கூறியதாவது:

இரண்டு குழந்தைகளோடு மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் வீட்டருகே வசித்த காந்தி லலித் குமார் நண்பராக அறிமுகமானார். என் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று சேர்ப்பது உள்ளிட்ட வேலைகளில் அவரால் எனக்கு உதவிகள் கிடைத்தன. நான் கணவரை பிரிந்ததை அறிந்து, அவரும் தான் ஆதரவற்றவன் எனக்கூறி என்னுடன் பழகினார்.

என் குழந்தைகளின் பாதுகாப்புக்காக திருமணம் செய்ய முடிவு எடுத்தேன். ஆனால், லலித்குமாருடன் பழகிய சில மாதத்தில், அவருக்கு பல பெண்களோடு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதனால் அவரிடம் இருந்து விலகினேன். வீட்டை விட்டு துரத்தினேன். குறும்படம் எடுப்பதாக கூறி, என்னுடன் நெருக்கமாக எடுத்த படங்களை, என் பேஸ்புக் முகவரியை திருடி, நான் போட்டது போலவே படங்களை பரப்பி, என் கணவர் போல் தன்னை அவர் வெளிப்படுத்திக் கொண்டார். ஒரு முறை என் அனுமதி இன்றி, வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்றார். மனரீதியிலான தொல்லை அதிகரித்ததால் அவன் மீது புகார் கொடுத்தேன். போலீசார் அவனை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.

இந்நிலையில் துாத்துக்குடி சம்பவம் தொடர்பாக நான் பேசி கைதான போது ஜாமீனில் வெளியே எடுப்பது போன்ற பணிகளில் லலித்குமார் உதவி செய்ய வந்தான். மீண்டும் என்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தினான். ஆனால், நான் மறுத்து விட்டேன். அவனுக்கு பல பெண்களோடு தொடர்பு இருக்கிறது. நந்தினி, சாந்தி, தனலட்சுமி என பல பெண்களை அவன் ஏமாற்றியுள்ளான். எனக்கும் லலித்குமாருக்கும் திருமணம் ஆகிவிட்டது எனக் கூறுவதில் உண்மை இல்லை. லலித்குமார் குறித்த உண்மை அவரது குடும்பத்திற்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in