'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அடுத்து விஜய், அஜித் ஆகிய இருவரும் தான் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்கள். விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்து கமர்ஷியல் ரீதியாக எந்த நடிகர் 'பாக்ஸ் ஆபீஸ் பாப்புலர்' என்பதில் பலத்த போட்டி இருக்கிறது.
விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்த நிலையில் சிம்பு, தனுஷ் எனச் சொல்லலாம் என்ற ஒரு சூழல் சில வருடங்களுக்கு முன்பு உருவானது. ஆனால், தவறான படங்களால் அவர்கள் அதற்கான இடத்தை இழந்துவிட்டனர். இனி, அவர்கள் நடித்து வரும் படங்கள்தான் அவற்றை முடிவு செய்யும்.
இதனிடையே, பாக்ஸ் ஆபிசில் சிவகார்த்திகேயன் வேகமாக வளர்ந்து வருகிறார் என்று சொல்லப்பட்டது. அவர் நடித்து கடந்த வாரம் வெளியான 'சீமராஜா' படம் பெரிய வசூலைப் பெற்றால் விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்து சிவகார்த்திகேயனும் அந்த இடத்திற்கான போட்டியில் இடம் பெறலாம் என்றார்கள்.
அதனாலேயே, விஜய், அஜித் ரசிகர்கள் 'சீமராஜா' படத்திற்கு எதிராக கடந்த சில தினங்களாக பல்வேறு விதமான மீம்ஸ்களை சமூக வலைத்தளங்களில் உலவ விட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த மீம்ஸ்கள் வைரலாகப் பரவி வருகிறது. இருப்பினும், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்' ஆகிய படங்கள் அளவிற்கு பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணி 'சீமராஜா' படத்தில் திருப்திப்படுத்தவில்லை என்ற நடுநிலை விமர்சனம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.