தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்சினிமா வரலாற்றில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்றால் பாகுபலி- 2 படம்தான். இப்படம் தமிழகத்தில் சுமார் 150 கோடியை வசூலித்து விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் தலா 72 கோடி ஷேர் கொடுத்தது.
அதற்கு அடுத்து தமிழகத்தில் வசூல் சாதனை செய்த படம் மெர்சல். 120 கோடி வசூலித்து 60 கோடி ஷேர் கொடுத்தது. இந்நிலையில், பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'சீமராஜா' படத்தில் 14 ஆம் நூற்றாண்டில் நடக்கும் காட்சிகள் 15 நிமிடங்கள் இடம்பெறுகின்றன.
இந்தப் படத்தில் இடம்பெறும் பீரியட் காட்சிகளை டிரைலரில் பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் பண்ணினார்கள். சீமராஜா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், “இந்த டிரைலரின் கடைசி 3 ஷாட் பார்த்து, 'பாகுபலி மாதிரி இருக்கு' என சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன. அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை” என்று சிவகார்த்திகேயன் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக சீமராஜா படத்தின் முதல்நாள் வசூல் பாகுபலி 2 படத்தின் முதல்நாள் வசூலைவிட அதிகம் என்று சிலர் சமூகவலைதளங்களில் செய்தி பரப்பி வருகின்றனர். படத்துக்கு பில்ட்-அப் கொடுக்க வேண்டியதுதான்... அதுக்காக இப்படியா?