ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கயல் படத்திற்கு பிறகு சண்டி வீரன், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, மன்னார் வகையறா என பல படங்களில் நடித்தவர் ஆனந்தி. தற்போது, பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள, பரியேறும் பெருமாள் படத்தில் நடித்துள்ளார்.
திருநெல்வேலி மண்வாசனை கதையில் தயாராகியுள்ள இந்த படத்தை ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். கதிர் நாயகனாக நடித்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் வித்தியாசமான வேடம் என்பதோடு, அழுத்தமான வேடம் என்று கூறும் ஆனந்தி, இந்தப்படத்தில் அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார். இதற்காக பயிற்சியும் எடுத்து உள்ளார். மேலும் இனிமேல் தான் நடிக்கும் படங்களில் அவரே டப்பிங் பேசவும் திட்டமிட்டுள்ளார்.