டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா, தனது கணவரான நாகசைதன்யாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் இணைகிறார். சிவ நிர்வாணா இயக்கும் இந்த படத்தில் மீண் டும் நாகசைதன்யா-சமந்தா இணைவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு இப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பதை அறிவதிலும் சமந்தாவின் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், இதுகுறித்து சமந்தா ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும். எங்கள் திருமணத்திற்கு பிறகு ஒரு முதிர்ந்த காதல் கதையில் நடிக்க விரும்பினோம். அதுபோலவே ஒரு கதையை டைரக்டர் சிவ நிர்வாணா சொன்னதால் இந்த படத்தில் மிகுந்த ஆர்வத்துடன் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறோம்.
முக்கியமாக இந்த படத்தின் கதை இளம் தம்பதியரின் வாழ்க்கையின் உயர்வு-தாழ்வுகளை சொல்வதாக அமையும். அந்தவகையில், சுவாரஸ்யமாகவும், வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது குறித்த விசயங்களையும் இந்த படம் சொல்லப்போகிறது என்கிறார் சமந்தா.