தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சுந்தர்.சி.இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் புதிய படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்தது.
இப்போது அந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சிம்புவுடன் ஏற்கனவே 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருக்கிறார் தமன்னா.
அந்தப்படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும் தமன்னாவுக்கும் படப்பிடிப்பில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டு, அதனால் மனஸ்தாபமும் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தான், சுந்தர்.சி இயக்கும் படத்தின் மூலம் சிம்புவுடன் இரண்டாவது முறையாக இணைகிறார் தமன்னா.
இடையில் தமன்னாவை சுந்தர்.சி அப்ரோச் செய்தபோது, அவர் தனக்கும் சிம்புவுக்கும் உள்ள பிரச்சனை பற்றி சொல்லி இருக்கிறார். உடனே சிம்புவை தமன்னாவிடம் பேச வைத்து இருவரையும் சமாதானப்படுத்தி வைத்துள்ளார். அதன் பிறகே அந்தப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம் தமன்னா. சுந்தர் சி. இயக்கத்தில் தமன்னா நடிப்பது இது தான் முதல் முறை என்பது கூடுதல் தகவல்.