நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
தான் இயக்கும் படங்களின் கதை மற்றும் கேரக்டர் பற்றிய எந்தவொரு தகவலையும் அத்தனை எளிதில் வெளியிட மாட்டார் மணிரத்னம். அந்த வகையில், செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள நடிகர் - நடிகைகளின் கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டுமே வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றபோதும், படத்தின் கதையைப்பற்றி எந்தவொரு தகவலையும் சொல்லாத மணிரத்னம், நடிகர் நடிகைகளையும் சொல்ல அனுமதிக்கவில்லை. அதன்காரணமாக மேடையில் பேசிய அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய் என யாருமே தங்களது கதாபாத்திரங்கள் பற்றி வாய் திறக்கவில்லை.
ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, மணிரத்னம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அதனால் சுஹாசினியை எங்கு பார்த்தாலும் சார் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிப்பதற்காவது சிபாரிசு செய்யுங்கள் என்று கூறி வந்தேன்.
இந்த படத்திற்காக மணிரத்னம் நடிக்க அழைத்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், படத்தில் நான் இலங்கையை சேர்ந்த வீரப்பெண்ணாக நடித்துள்ளேன். எனது தோற்றத்தை முழுமையாக மாற்றி விட்டார்கள். என்னைப் பார்த்தால் எனக்கே அடையாளம் தெரியவில்லை என்று படத்தில் தனது கேரக்டர் பற்றி சில வரிகளில் சொல்லி முடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.