என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் யுடர்ன். கன்னடத்தில் வெளியான இந்த படத்தின் தமிழ், தெலுங்கு ரீ-மேக்கையும் பவன்குமாரே இயக்கியிருக்கிறார். கன்னடத்தில் அவர் இயக்கிய லூசியாவிற்கு பிறகு இந்த யுடர்ன் படமும் வசூல் சாதனை செய்தது.
இந்த படத்தில் தான் நடித்த அனுபவத்தைப்பற்றி சமந்தா கூறுகையில், யுடர்ன் என்னை மிகவும் கவர்ந்த படம். நான் இந்த கதையில் நடிக்க விரும்பியதால் தான் ரீமேக் செய்யப்பட்டது. அதேசமயம், இந்த படத்தில் பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
ஒரு புதுமையான முறையில் காட்சிகளை படமாக்கினார் இயக்குனர். தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் இரண்டு நிமிடம் வெளியில் சென்று விட்டு தியேட்டருக்குள் வந்தால் கூட ரசிகர்களுக்கு புரியாது. அந்த அளவுக்கு கண்ணிமைக்காமல் கதையோடு ஒன்றி பார்க்க வேண்டிய படம் இது.
நிறைய விசயங்கள் புரியாமல் இயக்குநர் சொன்னது போலவே நடித்திருக்கிறோம். அதனால், ரசிகர்களுக்கு ஏதாவது புரியாத விசயங்கள் படத்தில் இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. இயக்குநரே பொறுப்பு. அதனால் படத்தில் பிடிக்காத விசயங்கள் ஏதேனும் இருந்தால் என்னை திட்டாமல், இயக்குநரை திட்டுங்கள் என்று சிரித்தபடியே சொல்கிறார் சமந்தா.