தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் மோகன்ராஜாவும், அவருடைய தம்பி ஜெயம் ரவியும் 3 ஆண்டுகளுக்கு முன் தனி ஒருவன் படத்தில் இணைந்தனர். அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் படத்தை இயக்கினார் மோகன்ராஜா.
ஜெயம் ரவியோ போகன், மிருதன், வனமகன், டிக் டிக் டிக் என சில படங்களில் நடித்தார். இந்நிலையில், 3 வருடத்துக்குப் பிறகு, தனி ஒருவன் 2 படத்துக்காக மோகன்ராஜாவும், ஜெயம்ரவியும் மீண்டும் இணைகின்றனர்.
இந்தப்படத்தின் கதாநாயகனாக ஜெயம் ரவி என்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை. அதே நேரம் தனி ஒருவன்- 2 படத்தில் 2 கதாநாயகிகள் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு கதாநாயகியாக தனி ஒருவன் முதல் பாகத்தில் கதாநாயகி நடித்த நயன்தாராவே நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக நடிக்க, வனமகன் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்த சாயிஷா சைகலிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர்.