அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் ஊர காணோம். பிர்லா ஷா, பவித்ரா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பி.ஆர்.ஏ ஆனந்த் இயக்குகிறார். கே.எஸ் சரவணகுமார் வேலவர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் 22 வயதே ஆன பெண் இசை அமைப்பாளர் சந்திரா சத்யராஜ் அறிமுகமாகிறார். இது பற்றி அவர் கூறியதாவது:
என் தந்தை சத்யராஜ் லைட் மியூசிக் வைத்து நடத்தி வந்தார். நிறைய ஆல்பங்களுக்கு இசை அமைத்தார். சினிமா இசை அமைப்பாளராக வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு, அது ஊர காணோம் படத்தில் நிறைவேறியது. நானும் இசை அ மைப்பாளராக வேண்டும் என்று என்னை சவுண்ட் என்ஜினீயரிங் படிக்க வைத்தார். படித்து முடித்து விட்டு அப்பாவுக்கு உதவியாக இருந்தேன்.
ஊர காணோம் படத்துக்கு இசை அமைக்கத் தொடங்கியபோதே அப்பா திடீரென இறந்து விட்டார். இந்த படத்துக்கு இசை அமைத்து தர அப்பா தயாரிப்பாளருக்கு வாக்கு கொடுத்திருந்தார். அந்த வாக்கை நிறைவேற்ற நானே இசை அமைப்பாளராகிவிட்டேன். அப்பா எனக்கு கற்றுக் கொடுத்த இசையைக் கொண்டு நான் இசை அமைத்திருக்கிறேன். பிரியா கிருஷ்ணன், பரிமளாதேவி என்ற இரண்டு பெண் கவிஞர்கள் பாடல்களை எழுதி உள்ளார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் தொடர்ந்து படங்களுக்கு இசை அமைப்பேன். என்கிறார் சந்திரா சத்யராஜ்.