மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அந்தப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. அதன்பிறகு அங்காடித்தெரு படத்தில் மீண்டும் இருவரும் இணைந்தனர்.
அதில் பணியாற்றியபோது வசந்தபாலனுக்கும், ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் சின்னதாக மனஸ்தாபம் ஏற்பட்டது. அதனால் அங்காடித்தெரு படத்துக்கு பிறகு இயக்கிய அரவான், காவியத்தலைவன் படங்களுக்கு வேறு இசையமைப்பாளரைத் தேடிப்போனார் வசந்தபாலன்.
இந்நிலையில் தன்னை அறிமுகப்படுத்திய வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். 'ஜெயில்' என பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க ஏழை எளிய மக்கள் வசிக்கும் ஹவுஸிங் போர்டு பின்னணியில் உருவாகியிருக்கிறது. அதாவது பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கண்ணகிநகர் பற்றிய படம் இது.
சமூகத்தால் குற்றவாளியகளாக சித்தரிக்கப்படும் இந்த பகுதி மக்களின் வாழ்வியலைப் பற்றி பேசும் படமாம் இது. எனவே இப்படத்தின் படப்பிடிப்பை கண்ணகி நகர் ஹவுஸிங் போர்டிலேயே நடத்தியுள்ளார் வசந்தபாலன்.